சரியாக ஞாபகமில்லை. ஆனால் நான் சில பழைய படங்களில் பார்த்துள்ளேன். ஒரு கிராமத்திற்கு டீச்சர் ஒருவர் வருவார். அவருடன் ஒன்ற மறுக்கும் கிராமம். அதனால் டீச்சர் படும் சிரமம். பின்பு அவரின் ஏதாவதொரு Heroism. அதன்பின் கிராமமே அவருடன் ஜக்கியபடும்போது, அவர் பிரியவேண்டிய சூழ்நிலை. பிரியா விடை கொடுப்பாரா? மாட்டாரா? என்பது கிளைமாக்ஸ். (நடுவில் டீச்சர்... எதிர் பாலினத்தரோடு லவ்வுவார்.)
Saturday, October 1, 2011
வாகை சூட வா
சரியாக ஞாபகமில்லை. ஆனால் நான் சில பழைய படங்களில் பார்த்துள்ளேன். ஒரு கிராமத்திற்கு டீச்சர் ஒருவர் வருவார். அவருடன் ஒன்ற மறுக்கும் கிராமம். அதனால் டீச்சர் படும் சிரமம். பின்பு அவரின் ஏதாவதொரு Heroism. அதன்பின் கிராமமே அவருடன் ஜக்கியபடும்போது, அவர் பிரியவேண்டிய சூழ்நிலை. பிரியா விடை கொடுப்பாரா? மாட்டாரா? என்பது கிளைமாக்ஸ். (நடுவில் டீச்சர்... எதிர் பாலினத்தரோடு லவ்வுவார்.)
Wednesday, September 21, 2011
மயக்கம் என்ன song lyric.
பாடல் : காதல் என் காதல்
படம் : மயக்கம் என்ன
இசை : ஜி. வி. பிரகாஷ் குமார்
பாடல் வரி : தணுஷ்
பாடியவர்கள் : செல்வராகவன், தணுஷ்
இயக்கம் : செல்வராகவன்
**********
காதல் என் காதல் அது கண்ணீருல...
போச்சு அது போச்சு அட தண்ணீருல...
ஏ மச்சி... உட்ரா…
ஏய்... என்ன பாட உட்ரா...
நா பாடியே தீருவேன்...
ச்சரி பாடி தொல...
காதல் என் காதல் அது கண்ணீருல...
போச்சு அது போச்சு அட தண்ணீருல...
காயம் புது காயம் என் உள்ளுக்குள்ள...
பாலான நெஞ்சு இப்ப வேந்நீருல...
அடிடா அவல, ஒதடா அவல,
விட்ரா அவல, தேவையே இல்ல...
எதுவும் புரில, உலகம் தெரில,
சரியா வரல, ஒன்னுமே இல்ல...
ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினில...
படுத்துக்க படுத்துக்க உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோருணுல...
ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினில...
படுத்துக்க படுத்துக்க உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோருணுல...
ஆயிரம் சொன்னியே காதுல வாங்கல...
சூப்புல எங்குரேன் நெஞ்சுதான் தாங்கல...
சின்ன சின்னதா டிரீம் எல்லாம் கண்டன்...
ஆசிட் ஊத்தித்தா கண்ணுக்குள்ள...
நண்ப(ன்) அழுவுற கஷ்டமா இருக்கு...
கொஞ்சம் கூட அவ ஒர்த்தே இல்ல...
தேன் ஊறுண நெஞ்சுக்குள்ள
கல் ஊறுதே என்ன சொல்ல
ஒ படகிருக்கு வலை இருக்கு
கடலுக்குள்ள மீனா இல்ல
வேணாடா வேணாம்
இந்த காதல் மோகம்
பொண்ணுங்க எல்லாம்
நம்ம வாழ்வின் சாபம்...
பின்னாடி போயி நா
கண்டேன் ஞானம்...
பட்டாச்சு சாமி
எனகிதுவே போதும்...
அடிடா அவல, ஒதடா அவல,
விட்ரா அவல, தேவையே இல்ல...
மான் விழி தேன்-மொழி
என் கிளி நான் பலி
காதலி காதலி-என்
பிகர் கண்ணகி...
ப்ரண்ட்ஸு கூடத்தான் இருக்கனும் மாமா...
பிகரு வந்துடா ரொம்ப தொல்ல...
உன்ன சுட்டவ உருப்பட மாட்ட...
உன்ன தவிர என்னகொன்னும் இல்ல...
ஒ... கனவிருக்கு கலரே இல்ல,
படம் பாக்கறேன்... கதையே இல்ல
உடம்பிருக்கு உயிரே இல்ல...
உறவிருக்கு, பெயரே இல்ல...
வேணாடா வேணாம் இந்த காதல் மோகம்
பொண்ணுங்க எல்லாம் நம்ம வாழ்வின் சாபம்...
பின்னாடி போயி நா கண்டேன் ஞானம்...
பட்டாச்சு சாமி… … … …
… … … … … … … ...போதும் மச்சான்...
அடிடா அவல... ஒதடா அவல...
விட்ரா அவல... தேவையே இல்ல...
எதுவும் புரில... உலகம் தெரில...
சரியா வரல... ஒன்னுமே இல்ல...
ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினில...
படுத்துக்க படுத்துக்க உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோருணுல...
ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினில...
படுத்துக்க படுத்துக்க உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோருணுல...
குட் நைட்...
குட் நைட்...
அஹ... ஓகே...
ஹே...
குட் நைட்... தேங்க்யூ சோ மச் மச்சி...
Tuesday, September 13, 2011
அர்த்தமில்லா புரிதல்கள்...
ஏதும் வராத
அவளது மார்பில்
முகம் புதைத்து
எதையோ அருந்தி
கொண்டிருந்தேன்...
முனகல் சத்தம்
எதிர்ப்பார்த்து-அவள்
முகம் பார்த்த
என்னிடம்
பயத்துடனே
“அம்மா வந்துவிட்டால்...”
என்று பாடினனனனாள்...
சட்டென்று எழுந்து
அவளை அணைத்து
முத்தமிட்டு,
விலகினேன்.
“என்ன வேண்டாமா?”
மீதியை கண்களில் கேட்டபடி...
***********************
மணம் புரிந்து
மகிழ்ச்சி கொள்வோம்,
இப்பொழுது
பயம் கொள்ளவேண்டாம்...
என்பதை அவளது
சுருள் சுருளான
தலைமுடிகளை வருடியபடி
(அப்படி செய்வது
எனக்கு மிகவும் பிடிக்கும்.)
விவரித்து முடித்து,
கிளம்பினேன்.
வண்டியில் வரும்போது
குறுஞ்செய்தியால்
கைப்பேசி பீப்பியது...
எனது தோழி ஒருத்தி
அணுப்பியிருந்ததாவது:
-----------------------------------------------
உன் ஆளு சொல்றா!
பின் குறிப்பு: இது ஒருசில கற்பனையோடு எழுதப்பட்டது.
Saturday, July 16, 2011
அலைபாயும் மனங்கள்...
சிறுகதை என்பது அலைபாயும் மனங்களின் பிம்பம் என்பது என் கருத்து.
Wednesday, July 13, 2011
எனது முதல் முழு கவிதை.(கடல் அழகே)
Thursday, April 14, 2011
என் ஹைக்கூ முயற்சி...
பூத்து குலுங்கும் மலர்கள்அடுக்கு மாடிக் கட்டிடத்தின்நிழலில்...
நிழல் பட்டதால்
விரிந்து சுருங்கும்
பட்டாம்பூச்சியின் இறகுகள்...
இவையெல்லாம் நேற்றிரவில் இருந்து இன்று காலை வரை எழுதியது... இவற்றில் குறையிருந்தால் கூறவும்... இது ஹைக்கூ வே இல்லை என்றாலும் கூறவும் மாற்றி அமைத்துக்கொள்ளலாம். இவையெல்லாம் ஒரு வேகத்தில் எழுதியது.எழாயிரமாண்டு ஆயுள் தண்டனை
கொடுத்த அவள்
கட்டிப்பிடித்த குற்றத்திற்கு...
ஆனால் நீண்ட நாட்களுக்கு முன்பாக நான் எழுதிய ஹைக்கூ (எனக்கே தெரியாது அது ஹைக்கூ வடிவம் என்று.)
இதை ஆனந்த விகடனுக்கு கூட அனுப்பியிருந்தேன். ஆனால் பிரசுரிக்கவில்லை... அது இதோ...
விண்ணுக்கும் உண்டுஈரம்
மண்ணுக்கும் உண்டு
நடுவிலுள்ள மனிதர்களை தவிர...
Tuesday, March 15, 2011
The Man from Nowhere
கொரியா படங்களை அறிமுகம் செய்த பதிவுகள்:
http://cablesankar.blogspot.com/2011/02/i-saw-devil-2010-korea.html
எனக்கு கொரியா படங்கள் கிடைக்கவில்லை என்றாலும்... தேடிகொண்டேருந்தேன். ஏதேச்சையாக ஒரு கடையில் Mother என்ற படம் முதலில் கிடைத்தது. இப்படம் பற்றி ThaCinema பதிவில் படித்திருந்ததால் உடனே வாங்கிக்கொண்டேன். இதுதான் நான் முதன் முதலாக பார்த்த கொரியா படம். அடுத்து Memories of Murder பார்த்தேன்.
நேற்று ஒரு கடையில் New Collections தேடி கொண்டு இருந்த பொது The Man From Nowhere என்ற படம் கிடைத்தது. அது கொரியா மொழி படம் என்பதாலும், 2010 இல் ரீலிசாகி இருந்ததாலும் உடனே வாங்கி கொண்டேன். மட்டுமல்லாமல் நேற்றே பார்த்தும்விட்டேன்.
படத்தை பற்றி:
படத்தின் ஹீரோ அடகு கடை(Pawn Shop) வைத்து அமைதியாக வாழ்வை நகர்த்துபவன். அதற்கு பக்கத்தில் இருக்கும் வீட்டில்லுள்ள சிறுபெண் மட்டுமே ஹீரோ உடன் நட்பு வைத்துள்ளாள். சிறுவர்களை வைத்து போதை பொருள் கடத்தும் ஒரு கும்பலிடம் ஒரு Situation இல் மாட்டிகொள்ளும் சிறுபெண்ணை ஹீரோ காப்பாற்றுவதே கதை.
கதையை மூன்றே வரிகளில் எழுதிவிட்டாலும் படம் பார்க்கிற அனுபவம் வேறு. நிறைய திருப்பங்களும் உண்டு. கிளைமாக்ஸ் தூள்... மியூசிக் உம் நன்றாக இருந்தது. இப்படத்தை பற்றி MSK, கேபிள் சங்கர், கருந்தேள் ஆகியோர் எல்லாம் எழுதினால் நன்றாக இருக்கும்... படத்தின் ஹீரோ mother படத்தில் ஹீரோவாக இருந்தவர் என்று idmb ல செக் செய்து தெரிந்து கொண்டேன்.
Thursday, March 10, 2011
எழுதுவது எப்படி?
நன்றாக எழுதுவது எப்படி?
பல மாதங்களுக்கு முன் என் இலக்கிய ஆசிரியர் (நண்பர்) இதைப்பற்றி சொல்லிகொண்டிருந்தார். அது...
"நன்றாக எழுத வேண்டும் என்றால்... முதலில் எழுத ஆரம்பிக்க வேண்டும். எழுதிய உடனே சொல்வளம் வந்து விடாது. நீ எழுதி பழக பழகவே வரும்."
உங்களுடைய பதிவுகளை எல்லாம் பார்க்கும் பொது நான் எழுதினால் நான் எழுதினால் நன்றாக இருக்குமா? என்று ஒரு விதமான கூச்சம்(Guilty Feel) ஏற்பட்டதுண்டு.
ஆனால் இப்போது எழுதுகிறேன்... உங்களில் ஒருவனாக அல்ல. உங்கள் மாணவனாக...
நான் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நெறையவே உள்ளன. உங்கள் மாணவனாக என்னை ஏற்று உங்களது கருத்துக்களை எனக்கு வழங்குங்கள்.
எனக்கு மிகவும் பிடித்த விஷயம் "ஆரோக்கியமான விவாதம்". நிறைய விவாதித்து தெளிவு பெறுவோம்.
எனக்கு பிடித்தவற்றை எல்லாம் இங்கே பகிர்ந்துகொள்வேன்... உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்...
பின் குறிப்பு: நான் Broadband வைத்தில்லா காரணத்தால் உங்கள் பின்னூட்டங்களுக்கு உடனடியாக பதில் தெரிவிக்க முடியாது...