Tuesday, September 13, 2011

அர்த்தமில்லா புரிதல்கள்...

ஏதும் வராத

அவளது மார்பில்

முகம் புதைத்து

எதையோ அருந்தி

கொண்டிருந்தேன்...


முனகல் சத்தம்

எதிர்ப்பார்த்து-அவள்

முகம் பார்த்த

என்னிடம்

பயத்துடனே

“அம்மா வந்துவிட்டால்...”

என்று பாடினனனனாள்...


சட்டென்று எழுந்து

அவளை அணைத்து

முத்தமிட்டு,

விலகினேன்.



“என்ன வேண்டாமா?”

மீதியை கண்களில் கேட்டபடி...

***********************


மணம் புரிந்து

மகிழ்ச்சி கொள்வோம்,

இப்பொழுது

பயம் கொள்ளவேண்டாம்...

என்பதை அவளது

சுருள் சுருளான

தலைமுடிகளை வருடியபடி

(அப்படி செய்வது

எனக்கு மிகவும் பிடிக்கும்.)

விவரித்து முடித்து,

கிளம்பினேன்.


வண்டியில் வரும்போது

குறுஞ்செய்தியால்

கைப்பேசி பீப்பியது...

எனது தோழி ஒருத்தி

அணுப்பியிருந்ததாவது:

-----------------------------------------------


நீ ஆம்பள இல்லையாமே!

உன் ஆளு சொல்றா!






பின் குறிப்பு: இது ஒருசில கற்பனையோடு எழுதப்பட்டது.

4 comments:

  1. அருமையான கவிதை. தொடந்து எழுதவும். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. அர்த்தமற்ற புரிதல் தான்!

    நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதுங்கள்!
    சமயம் கிடைக்கும் போதெல்லாம் தாளில் எழுதிவைத்துக்கொள்ளுங்கள்.பிறகு நேரம் கிடைக்கும் போது பதிவிடுங்கள்

    ReplyDelete
  3. thank you gokul and N.h.Prasath...
    kandippaaga ezhuthuven...

    ReplyDelete